இலங்கையுடன் ‘ஏயர் பபுள்’ விமான சேவை ஒப்பந்தத்தை செய்துள்ள இந்தியா

இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு பன்னாட்டு பயணிகள் விமானங்களை இயக்க இலங்கையுடன் இருதரப்பு ‘ஏயர் பபுள்’(air bubble) விமான  சேவையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைசை்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை தங்களது விமான நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமைகளின் கீழ் இயக்க முடியும்.

இலங்கை  மாத்திரமன்றி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா,பிரான்ஸ், ஜேர்மனி,ஈராக், ஜப்பான், மாலைதீவு,நைஜீரியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,பிரித்தானியா, மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளுடன் இந்தியா தற்போது அத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது ட்விட்டரில்,

இந்தியா இலங்கையுடன் ஒரு ஏயர் பவுள் விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இது சார்க் பிராந்தியத்தில் இது போன்ற 6 ஆவது ஏற்பாடாகவும், மொத்தம் 28 ஆவது இடமாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 23 முதல்இந்தியாவில்திட்டமிடப்பட்ட பன்னாட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் கடந்த ஆண்டு மே முதல் வந்தே காரத் மிஷனின் கீழ் மற்றும் யூலை முதல் இருதரப்பு ஏயர் பபுள் ஏற்பாடுகளின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி –  The Hindu