இலங்கையில் கொரோனாவால் அதிகரிக்கும் இளையவர் மரணங்கள்

இலங்கையில் கொரோனாவால் இளையவர்கள் அதிகமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் இது வரையில் 10-30 வயதுக்கும் இடைப்பட்ட 16 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக கோவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதே போன்று 9 வயதுக்கு குறைவான குழந்தைகள் 2,31- 40 வயதுக்கு இடைப்பட்ட 35 நபர்களும், 41 -50 வயதுக்கு இடைப்பட்ட 92 நபர்களும், 51 -60 வயதுக்கு இடைப்பட்ட 184 நபர்களும், 61 -70 வயதுக்கு இடைப்பட்ட 339 நபர்களும், 71 வயதுக்கு மேற்பட்ட 617 நபர்களும் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக கோவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.