இலங்கையில் உணவுப் பொருட்களில் போர்மலின்

இலங்கையில் பாவிக்கப்படும் உணவுப் பொருட்களில் சடலங்களுக்கு நறுமணமூட்டும் போர்மலின் பாவிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பாவனை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் இராஜாங்க  அமைச்சர் புத்திஹபத்திரண தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் நாட்டிலுள்ள மலர்ச்சாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மலர்ச்சாலைகளுக்கு அளவாக போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக போர்மலின் விநியோகிக்கப்படுமாயின், விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.