இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ரஸ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.