இலங்கைக்கு இந்திய இராணுவம் வரும் என்ற செய்தியில் உண்மையில்லை

கொரோனா வைரசை எதிர்த்துப் போராட இந்திய இராணுவம் இலங்கைக்கு வரும் என இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தனி இராணுவ குழுக்களை அனுப்ப இந்திய இராணுவம் தயாராகி வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு கூறியதாக செய்திகள் வெளியாகின.

மேலும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும் உதவி வழங்குவதற்கான இந்தியாவின் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவல் ஒரு போலியானது என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.