இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம்!!சேமமடுவில்!!

கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று(8) இடம்பெற்றது.

கதந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 05.மணியளவில் சேமமடு 01ம் யூனிற்,மற்றும் 02யூனிற் பகுதிகளிற்கு சென்ற இலங்கை இராணுவத்தினர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 28 சாதாராண பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்து வாகனங்களில் ஏற்றிசெல்லப்பட்டு காணாமலாக்கபட்டிருந்தனர்.அவர்களின் 35வது நினைவுதினமே அன்னுஷ்டிக்கப்பட்டது.

01 1 இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம்!!சேமமடுவில்!!

சேமமடு பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சேமமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் விசேட பூஜைவழிபாடுகளும் நடைபெற்றது.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தார்கள்,உறவினர்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

01 1 இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம்!!சேமமடுவில்!!