கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களின் முன் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் நடத்தியிருந்த நிலையில்,யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களின் முன் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.