இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.

வவுனியாவில் நேற்று பிற்பகல் வேளையில் காற்றுடன் கூடிய மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் மினி சூறாவளி காரணமாக பத்துக்கு மேற்பட்ட வீடுகளின் கூரைகள் மற்றும் பயன்தரும் மரங்கள், பப்பாசித் தோட்டங்கள் மற்றும் பாடசாலை கட்டடம் என்பன பாரியளவிலசேதமடைந்துள்ளது.

Posted by Illaku weekly on Wednesday, 8 April 2020

s1 இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.

s4 இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.

s5 இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவிவந்திருந்ததுடன் இருநாட்களாக இடிமின்னலுடன் கூடியமழை பெய்துவருகின்றது.

இந்நிலையில் வவுனியா, சுந்தரபுரம் மற்றும் மணிபுரம் பகுதியில் இன்றயதினம் வீசிய மினி சூறாவளியில் பத்து வீடுகளின் கூரைகள் பாரிய சேதமடைந்துள்ளதுடன் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலத்தின் பிரதான கட்டடங்களின் கூரைத்தகடுகளும் தூக்கிவீசப்பட்டடுள்து அதேவைளை விவசாயிகளின் பப்பாசித்தோடம் மற்றும் வீடுகளில் இருந்த பயன்தரும் மரங்கலான மா, பலா, தென்னை, வாழை, ஈரப்பலா ஆகிய மரங்களும் சேதமடைந்துள்ளது.
இதேவளை வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் காணப்பட்ட பழமை வாய்ந்த மரமொன்றும்முறிந்து விழ்ந்தமையினால் குறித்த வீதியுடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில்மின்னல் தாக்கத்துக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
s6 இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.

s8 இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.

குறித்த நபர் இன்று மாலை தனது அயல் வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் உடனடியாக அவர் அவரச அமலபுலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் முன்னமே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த எஸ். மங்களேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சாவடைந்துள்ளார்.

நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்கள் இயற்கையில் சீற்றத்துக்கும் முகம்கொடுத்து வருவது துன்பியல் சம்பவமாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

s9 இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.

s10 இயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.