மாஸ்கோவும் புது தில்லி யும் “அவர்களின் இழந்த பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்த முடியும்” என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது 25% வரிகளை அறிவித்துள்ளதுடன், மேலும் ரஷ்யாவுடனான தெற் காசிய நாட்டின் பொருளாதார உறவுகளுக்கு அபராதமும் விதித் துள்ளார்.
இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்கள் தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாகக் குறைக்க முடியும். எனக்கு கவலையில்லை. நாங்கள் இந்தியா
வுடன் மிகக் குறைந்த வணிகத் தையே செய்துவருகின்றோம், அவர்களின் கட்டணங்கள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. ரஸ்யாவுடன் நாம் வர்த்தகம் செய்வதில்லை என ட்ரம்ப் தனது சமூகவலைத்தளத்தில் கடந்த புதன் கிழமை (30) தெரிவித்துள்ளார்.
ஆனால் சர்வதேச வர்த்தகம் குறித்த ஐக்கிய நாடுகளின் தரவுகளின் படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் ஏற்றுமதி $3.27 பில்லியனாக இருந்துள்ளது. 2024-25 நிதியாண்டில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற் கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் $131.8 பில்லியனை எட்டியிருந்தது.
இதனிடையே ட்றம்பின் வரி விதிப்புக்கள் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரத்தில் 2 றில்லியன் டொலர்கள் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என த புளூம்பெர்க் ஊடகம் இந்த வாரம் தெரிவித்துள்ளது.



