இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை தேவையா? – ஆராய்வதற்கு சிறப்புக் குழு

1991ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்தையடுத்து, இந்தக் கொலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வந்தது.

இந்தத் தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை நீடிக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைவாக, இந்த ஆண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் உத்தரவை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதே வேளை இந்தத் தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு அவசியம் உள்ளதா என்பது பற்றி ஆராய்வதற்கு இந்திய மத்திய அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையிலான குழுவினர் இத்தடை குறித்து ஆராய உள்ளனர்.