இந்தியாவிலிருக்கும் ஈழத் தமிழரை நாடு திரும்பக் கோரும் சி.விக்னேஸ்வரன்

இந்தியாவில் வசித்து வரும் ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான சட்டமூலம் நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட போது, இலங்கையர்களுக்கான குடியுரிமை வழங்குவது தொடர்பான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இது பற்றி சி.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவில் வசித்து வருகின்ற தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது ஒரு பாதிப்பான விடயமாக கருத முடியாது. இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்காக இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.