அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும் மிகைப்படுத்தி பயமுறுத்தும் ஊடகங்களும்-பரமபுத்திரன்

தற்காலத்தில் குறித்த கால இடைவெளிக்கொரு தடவை புதிய நோய் ஒன்று அறிமுகப்படுத்தப்படும். பொதுவாக இவை வைரசு நோய்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ள வைரசு கொரோனா வைரசு. வைரசு என்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் மக்களுக்கு விழிப்பூட்டுவதாக கூறிக்கொண்டு செய்தி ஊடகங்களும் மருத்துவமும் மக்களை பயமுறுத்துவதில் குறியாக இருக்கின்றது.

தாங்கள் என்ன செய்கின்றார்கள் என்று ஊடகங்களும் தெரிந்து கொள்ளவில்லை. மருத்துவர்களும் புரிந்து கொள்ளவில்லை. இன்று வேறுபட்ட நோய்களை இனம் காட்டி, அதற்கு அறிகுறிகள் கூறி, அந்த நோயின் தாக்கங்களை எடுத்துச் சொல்லி மக்களை அச்சத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள் செய்தியாளர்கள். இதற்கு உதவியாக மருத்துவர்கள் கூறுவதாக சொல்லிக் கொள்கின்றார்கள்.

மக்களுக்கு உதவுவதாக எண்ண வைத்து மக்களை மனநோயாளிகளாக மாற்றுகின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் அருகில் அமர்ந்திருப்பவனை ஏக்கத்துடன் பார்த்து ஏதாவது நோய் ஒன்றை என்மேல் ஏற்றிவிட்டு செல்வானோ என்ற கலக்கத்துடன் நிற்கின்றான். மறுபுறத்தில் “மூடு முகம், போடு தடுப்பூசி” என்று அறிவுறுத்தல்கள் வழங்குகின்றனர். அன்றாடம் உழைத்துக் களைத்து வாழும் மக்கள் மிரண்டு பயந்து அலைகின்றனர். முகமூடிகளை போட்டுக்கொண்டு சுற்றுகின்றனர். காரணம் நாமோ படிக்கவில்லை, ஆனால் படித்தவர்கள் நோய்கள் தொடர்பாக சொல்கின்றார்கள், எனவே அது சரிதான் என்று முழுமையாக நம்புகின்றார்கள். இது சரியா?

இறப்பு என்பது உறுதியானது. ஆனால் நாம் இறந்து விடுவோம் என்ற பயமே எப்போதும் மனிதர்களை கலங்க வைக்கிறது. அது வாழவேண்டும் என்ற விருப்பு. அதாவது உயிர் மேல் கொண்ட ஆசை. இந்த உலகின் மீது கொண்ட மோகம். இதுதான் ஒவ்வொரு மனிதனையும் நோய்க்கு அச்சமுற வைக்கின்றது.

CHINA HEALTH THAIaaaLAND 1580210047 அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும் மிகைப்படுத்தி பயமுறுத்தும் ஊடகங்களும்-பரமபுத்திரன்

இருந்தாலும் திடீர் சாவு மனிதனை பயமுறுத்துவதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக வீதி விபத்துகளால் நிகழும் இறப்புகளை கூறலாம். ஒரு வீதி விபத்து நடை பெற்றால் அதற்கு காரணம் வீதியில் குறைந்த பட்சம் ஒருவர் அல்லது இருவரும் வீதி விதிகளை மீறியுள்ளனர்.

எனவே விதி மீறல்தான் விபத்துக்கு காரணம். வீட்டிலிருந்து புறப்பட்ட எத்தனை பேர் வீதியிலே செத்து மடிந்திருக்கிறார்கள். வேலைக்கு புறப்பட்டவன், வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவன், வீட்டில் மனைவி பார்த்துக் கொண்டிருப்பாள், பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கும் என்று வீடு நோக்கி ஓடியவன் எனப்பலர் வீதி விபத்தில் இறந்திருக்கின்றனர்.

அவர்களுக்காக எவரும் கவலைப்படுவதில்லை. அவர்கள் உயிர்களை பெறுமதி மிக்கதாக கொள்வதில்லை. வேகத்தை கூட்டி ஓடாதீர்கள், வாகனம் ஓடும் போது வேறு செயற்பாடுகள் செய்யாதீர்கள், கைபேசி பயன்படுத்தாதீர்கள் என்பதை எத்தனை பேர் கவனத்தில் எடுக்கின்றோம். வீதி விதிகளை படிக்கின்றோம். சாரதி அனுமதிப் பத்திரம் பெறுகின்றோம். எத்தனை பேர் மற்ற மனிதர்களை காக்க வேண்டும் என்று நினைத்து வாகனம் செலுத்துகின்றோம். ஆனால் கொரோனா வைரசு என்றதும் எங்களை பாதுகாக்க எப்படி அலைகின்றோம். பயத்தில் உறைகின்றோம். எம்மைப் போல் பிறரையும் நேசிக்கின்றோமா?

தமிழில் “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” என்று ஒரு தொடர் உண்டு. அதாவது ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது அவனை கொல்வதற்கே அவனுடன் ஒரு வியாதி பிறந்திருக்கும். எனவே உடன் பிறந்த வியாதி தாக்கி மனிதன் இறப்பது உறுதி. இதனைவிட மனிதர்களை பொறுத்த வரை இரு வழிகளில் நோய்கள் வருகின்றன. ஒன்று உடலுக்கு தேவையான போசணைப் பொருட்கள் அதாவது உணவுப் பற்றாக்குறை காரணமாக வரும் குறைபாட்டு நோய்கள், மற்றையது நோயாக்கிகள் எனப்படும் பற்றீரியா, பங்கசு, வைரசு போன்ற நோய்க் கிருமிகள் மூலம் மனிதனுக்கு வரும் நோய்கள். பொதுவாக மனிதனுக்கு வரும் நோய்கள் எங்களை துன்பப்படுத்தும். இது உடல், உள பாதிப்புகளை தரும்.unnamed 1 அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும் மிகைப்படுத்தி பயமுறுத்தும் ஊடகங்களும்-பரமபுத்திரன்

உடலை பொறுத்தவரை உடல்வலி, காய்ச்சல், சுவாச குழப்பம், தலைவலி போன்ற உபாதைகளை உடலுக்கு கொடுக்கலாம். அடுத்து உடல் அங்கங்கள் பாதிக்கப்படுதல், நரம்புகள் தாக்கப்படுதல் போன்ற நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சிலவேளைகளில் இறப்பையும் தரலாம். ஆனால் முந்தைய காலங்களில் தொற்று நோய்கள் தாக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்துள்ளனர்.

வாழ்ந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். அன்று தொடர்பாடல் ஊடகங்கள் இந்தளவுக்கு இல்லை. அதனால் செய்திகள் பரப்பப்பட்ட அளவு குறைவு. மருத்துவம் உயர் நிலையில் இல்லை. மக்கள் சுகமாக வாழந்தார்கள். இன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்குக்காட்டி மக்களை ஏங்கச் செய்கின்றனர். உயிர்ப் பயம் காட்டி மருத்துவர்களிடம் ஓட வைக்கின்றனர். மருத்துவர்களும் தங்கள் பங்குக்கு மக்களை பயப்பட செய்கின்றனர்.

தாயின் வயிற்றில் கருக்கொள்ளும் சிசு வயிற்றினுள் முற்று முழுதாக தாயால் பாராமரிக்கப்படுகின்றது. பிறந்த குழந்தை தாயின் பால் குடிக்கும் போது தனது உடலுக்கு தேவையான போசணை மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பவற்றை பெற்றுக் கொள்ளும். சிறு பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும். ஆனால் பிள்ளை வளர வளர உடல் வளர்தல் மட்டுமல்ல நோய் எதிர்க்கும் ஆற்றலும் வளரும். இருந்தாலும் நோய் எதிர்ப்பு ஆற்றல் தொடர்ந்து வளராது. குறித்த காலம் வரை வளரும். அதன் ஆற்றல் ஏறத்தாழ எமது நாற்பது வயது வரை உச்சமாக இருக்கும்.

அதன் பின் நோய் எதிர்க்கும் ஆற்றல் குறைந்து செல்லும். அதாவது நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை குறைந்து செல்ல ஆரம்பிக்கும். இதைவிட வாழும் காலம் முழுவதும் நோயாக்கிகள் எங்களை தாக்கியபடியே இருக்கும். இதனை தடுப்பதற்கு நாங்கள் மருத்துவரை நாடுவோம். அவர்கள் சில மாத்திரைகள் தருவார்கள். எமக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல நோயும் குணமடையும் என்று நம்புகின்றோம். எப்போது நாம் மாத்திரைகளை உண்ண ஆரம்பிக்கின்றோமோ அதன்பின் மாத்திரைகளில் இருந்து எம்மால் விடுபட முடியாது என்பதும் உண்மையான செய்தி.

நோய் என்பது புவியில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதாவது தாவரம், விலங்குகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் என எல்லாமே நோயால் தாக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிர்கள் எமக்கும் நோய் வழங்கும் காரணிகள். நுண்ணுயிர்கள் மனிதனுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய பாதிப்பு நோய்களை தருவதுதான். உண்மையில் நுண்ணுயிர்கள் என்பவை கண்ணுக்கு தெரியாதவை. அதாவது நுணுக்குக்காட்டி மூலம் அவதானிக்கப்படுபவை. அதிலும் இருவகை நுணுக்குக்காட்டிகள் உண்டு. ஒன்று ஒளி நுணுக்குக்காட்டி, மற்றது இலத்திரன் நுணுக்குக்காட்டி. இலத்திரன் நுணுக்குக்காட்டி உயிர் அல்லாத பொருள்களை அவதானிக்கும் ஒன்று. அதாவது உயிருள்ளவை எதனையும் இதன் மூலம் அவதானிக்க முடியாது. வைரசுக்கள் இலத்திரன் நுணுக்குக்காட்டிகளிலேயே அவதானிக்கப்படுகின்றன.

அதேவேளை சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்தான் இலத்திரன் நுணுக்குக்காட்டிகளை கையாள முடியும். அவர்கள்தான் இந்த வைரசுக்கள் தொடர்பாக அறிவிக்கின்றனர். இருப்பினும் வைரசுக்கள் உயிருள்ளவை என்றும் சொல்ல முடியாது, உயிரற்றவை என்றும் சொல்ல முடியாது இரண்டுக்கும் இடைப்பட்டவை. பொதுவாக வைரசுக்களை மருந்துவகைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தல் கடினம். எனவே கொரோனா வைரசும் இந்த வகைக்குள் வருகின்றது. இது ஒரு புதிய வைரசு அல்ல. ஏற்கனவே இருந்த ஒன்று. இப்போது பெரிதாக பேசப்படுகின்றது. எங்கள் உடலினுள் புகும் வைரசுக்களை ஏன் கட்டுப்படுத்த முடிவதில்லை?. இவை ஏன் நோய்களை ஏற்படுத்துகின்றன?.

தொடரும்..