அரச தலைவருக்கான போட்டியில் இருந்து விலகமாட்டேன் – சிங்கப்பூரில் இருந்து கோத்தா

மக்கள் தனக்கு வழங்கிய ஆணைக்கு ஏற்ப தான் செயலாற்றப் போவதாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தான் அரச தலைவருக்கான போட்டியில் இருந்து விலகப்போவதில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

நேற்று (3) அவரை பார்வையிடுவதற்காக சிங்கப்பூர் சென்ற ஒரு தொகுதி சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருதைய அறுவைச் சிக்சைக்கு பின்னர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் கோத்பாயா ஒய்வெடுத்து வருகின்றார்.

சிகிச்சைக்கு பின்னர் தான் விரைவாக நலமடைந்து வருவதாகவும், அரச தலைவருக்கான போட்டிகளில் இருந்து தான் ஒருபோதும் விலகப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில் அதற்கான தயாரிப்பு வேலைகளை தான் எவ்வாறு மேற்கொண்டு வருகின்றார் என்ற விளக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னா ரணதுங்கா அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முன்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் கோத்தபாய தற்போது அவருக்கு எதிராக அமெரிக்கா வழக்குகளை முன்னெடுத்து வரும் நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலையை நாடியுள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவின் அரச தலைவருக்கான தேர்தலில் தாம் எவரையும் ஆதரிக்கப்போவதில்லை என தமிழ் மக்கள் முடிவெடுத்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.