அமைச்சர் மகிந்த அமரவீரவின் மகனுக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த அமைச்சர் மகிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இன்று(17) காலை தியத்தலாவையில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் 28ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.