அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோகும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது – பேராயர் மல்கம் ரஞ்சித் காட்டம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் ஒரு அனைத்துலக சதி என்றும் அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோன சிறிலங்கா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் தெரிவித் துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப் பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

குண்டு தாக்குதல்களை நடத்திய இளைஞர்கள் அனைத்துலக சதிகாரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துலக சக்திகளுக்கு உலகளாவிய முஸ்லிம் கள் பலியாகி விட்டனர்.

உலகெங்கிலும் அழிவுகளை உருவாக்க இஸ்லாமிய சித்தாந்தங்களைப் பயன்படுத்தும் சதிகாரர்களுக்கு எதிராக உலகளாவிய முஸ்லிம்கள் துணை நிற்க வேண்டும்.நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான மோதலின் விளைவாக பாதுகாப்பு சபை கூட்டங்களை நடத்த முடியவில்லை.

அரசியல் தலைவர்கள் குண்டு தாக்குதல்கள் குறித்து முன் எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இதன் விளைவாக கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர்.
ஐந்து நாடுகளால் கட்டுப்படுத்தப்படுவது தான் ஐ.நா. அவர்களின் நோக்கங் களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அது உள்ளது. ஐ.நா.வை யாரும் நம்ப முடியாது.

குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களை ஐ.நா. அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை. ஆனால் சர்ச்சைக்குரிய மருத்துவர் உட்பட தாக்கு தலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மட்டுமே பார்வை யிட்டனர்.

இந்த நாட்டில் தலைவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்க பயப்படு கிறார்கள். அனைத்துலக சக்திகளை சுதந்திரமாக நடமாட அனுமதித்ததே இதற்குக் காரணம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.