விக்கி வாயை அடக்காவிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம்; எச்சரிக்கின்றார் விமல் வீரவன்ச

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்கவேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவைச் சார்ந்தவையாகும். இதை வக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம் ஓட ஓட விரட்டி அடிப்போம்.

முதலமைச்சராக பதவி வகித்து வடக்கு மாகாணத்தை நாசமாக்கிய விக்னேஸ்வரன் இனவாதத்தையும் மொழிவாதத்தையும் மதவாதத்தையும் வைத்து அரசியல் நடத்தலாம் என்ற நோக்குடன் தற்போது நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவரின் இலக்குகள் எதுவும் எம்மை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேறாது” என்றார்.