யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு. வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புபிரிவின்  அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் கண்டிவீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.