யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனையில் நேற்று நால்வருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் ஒருவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்தவர் என்றும், மற்றையவர்கள் கம்பஹாவை சேர்ந்த வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வடக்கில் தனிமைப்படுத்தப்பட்ட 160 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.