458 Views
வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி – பூஜாப்பிடிய பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுதந்திர கட்சியுடன் பொதுஜன முன்னணி கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். எனினும், தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ கூட்டணி அமைக்கலாம். எவ்வாறாயினும், மொட்டுச் சின்னத் திலேயே போட்டியிடுவோம் என்று நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.