மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெறிய அரசு தயாரா? சஜித்

நாட்டுக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்த மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை ஏப்ரல் 4 ஆம் திகதி கிழித்தெறிய அரசு தயார் என்றால் நாங்கள் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றக்கொண்ட பின்னர் பாராளமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் பூரண ஆதரவளிப்போம். ஆனால் நாட்டில் இனவாதம், மதவாதத்தை அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரிவாக்குவதன் மூலமே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த
முடியும்.

அதனால் அரசு தெரிவிக்கும் மக்கள் மயமான வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்குப் பூரண ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது. அரசு
மக்களுக்கு அளித்த வேலைத் திட்டங்களை மேற்கொள்ள பொதுத் தேர்தல் வரை பார்த்துக் கொண்டிருக்கமாமல் விரைவாக வரவு – செலவுத் திட்டத்தை நாடாளு
மன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும்’ என்றார்.