பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபா 1000ம் வழங்க முடிவு

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், பிரதமரும், நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

அதில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக  உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம்  தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

மேலும்  2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்,

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஓய்வூதிய வயதை 60 ஆக நிர்ணயிக்க ஊழியர் சேமலாப நிதி சட்டம் திருத்தப்பட வேண்டும்

ஒற்றை பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தடை

நிதி திருத்தச் சட்டம் அடுத்த ஆண்டு திருத்தப்பட உள்ளது

உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் பின்னர் நிர்வாகமற்ற அரச அதிகாரிகளுக்கு மேலதிக தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்

அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதிக்கான வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களையும் 7% வரை குறைக்கப்படும்

2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனச் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும்

வங்கி சாரா நிதி நிறுவனங்களை கண்காணிக்க வலுவான புதிய சட்டங்கள் அமுலில் இருக்க வேண்டும்

உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க நடவடிக்கை

இரத்தினக்கல் மற்றும் நகைகளுக்கு மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு அளிக்க தீர்மானம்

சுற்றுலாத் துறையினரால் பெறப்பட்ட கடன்களுக்கான தற்காலிக தடை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மத்திய வங்கியால் நீடிக்கப்படும்

கொழும்பின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் இலங்கையின் முக்கிய நகரங்களில் வீட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்

நாட்டில் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மக்கள் தொகையில் 54% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கவும் அதற்காக 1000 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யவும் தீர்மானம்

கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையம் இயற்கை எரிவாயு மின் நிலையமாக மாற்ற தீர்மானம்

600 மெகாவாட் திறன் கொண்ட மேலும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் கட்ட அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும்

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் 1000 ரூபாயாக அதிகரிக்க தீர்மானம்

உலர் மீன் மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட மீன்களுக்கான வரியை அதிகரிக்க தீர்மானம்

மீன்வளத் தொழிலுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பால் பண்ணை அபிவிருத்திக்கு 500,000 ரூபாய் கடன் வழங்க முன்மொழிவு

பால்மா இறக்குமதிக்கு பதிலாக உள்ளூர் பால் உற்பத்திக்காக அரசாங்கம் நடத்தும் பண்ணைகளுக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

விவசாய நோக்கங்களுக்காக விளைநிலங்களைப் பயன்படுத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்க விவசாய அபிவிருத்தி சட்டத்தில் திருத்தம்

விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும் அதேவேளை மஞ்சள், இஞ்சியை இறக்குமதி செய்த் தடை

விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு கொள்முதல் விலை உத்தரவாதம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானம்

வெளிநாடுகளில் பணிபுரிந்த 45,000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை

வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

சமுர்தி பயனாளிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு (முதலாளியின் பங்களிப்பு 0.25) காப்பீட்டுத் திட்டம்

தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்க தீர்மானம்

100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும்

தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை, கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அவர்களது போஷாக்கினை மேம்படுத்தவும் நடவடிக்கை. திரிபோஷ உற்படுத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஆசிய அபிவிருத்தி வங்கி , ஜைய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானம்

சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களுக்கு கூடுதலாக 18,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்க தீர்மானம்

தொழில்முயற்சி பொருளாதார முறையை எதிர்வரும் 2 வருடங்களில் மேற்கொள்ள திட்டம்

தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 800,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம்.

பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை நிவர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

அரசு வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பெரும் வணிகங்களுக்கு வட் வரியை 8% க்கு மிகாமல் பராமரிக்க அரசாங்கம் தீர்மானம்

விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரி விலக்கு

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானம்

மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும்.