பதுளை பகுதியில் இடம்பெற்ற விபத்து! பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

பதுளை – பசறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 31 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இந்த விபத்தில் பலியானவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அனைத்து மருந்து வகைகளை வழங்கவும் போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

சம்பவத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பிரகாரம் இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளது.