யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளத்தை அழிக்க விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்களின் கால தாமதத்தினால் முற்றாக அந்த முகப்பு எரிந்து முடிந்துள்ளது.
இந்தச் சம்பவம் தாயக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஈழத்தமிழர் போராட்ட அடையாளச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது மாவீரர் கிட்டு பூங்கா விற்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.