தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜனுக்கு கிராமசேவையாளர் ஒருவரால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதுடன் அவரின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக குறித்த கிராம சேவையாளர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளருக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்துள்ளதாகவும் போலி முகநூல் ஒன்றினை இயக்குவதாகவும் அதனூடாக தன்னுடன் தொடர்புபட்ட விடயங்கள் வெளியிடப்படுவதாகவும் குற்றம் சாட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.