தமிழக அரசு, இலங்கை அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்-சுப்பிரமணியன் சுவாமி

தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்‌ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் “மேலும் இவை அனைத்துக்கும் அப்பால், பல தி.மு.க. தலைவர்களுக்கும் தென்னிலங்கையில் சொத்துகள் இருக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.