சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 15ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுபேரூரைகளும் இடம்பெற்றது.

குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன்,இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது.

நிகழ்வில் மதகுருமார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,காதர்மஸ்தான்,நகரசபை தவிசாளர் இ.கௌதமன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன்,நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் தேவராசா,
பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.