381 Views
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதி வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்ததுடன் குறிப்பிட்ட வீட்டில் இருந்து மூன்று கிலோ வெடிமருந்தை மீட்டதுடன் ஐயத்திற்கிடமான இருவரைக் கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட வீட்டில் உள்ளவர்கள் போரின் எச்சங்களாகவுள்ள வெடிபொருட்களை எடுத்து அவற்றிலிருந்து வெடிமருந்தை பிரித்தெடுத்து விற்பனை செய்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.