சிறீலங்காவில் 1749 பேர் கொரோனாவினால் பாதிப்பு

சிறீலங்காவில் நேற்று (03) வரையில் 1749 பேர் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (03) புதிதாக நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 31 பேர் கடற்படையினர், 19 பேர் கட்டாரில் இருந்தும், 14 பேர் பங்களாதேசத்தில் இருந்தும், இருவர் குவைத்தில் இருந்தும் வந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.