468 Views
மட்டக்குளி – கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு குழுவினர், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என கொவிட் 19 தொடர்பான செயலணி தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதியின் உத்தரவின்பேரில், மட்டக்குளி – சமித்புர பகுதிகளில் விசேட பாதுகாப்பு பிரிவினரை, கண்காணிப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுத்தியுள்ளனர்.
மேலும், கொட்டாஞ்சேனை கிழக்கு புளுமெண்டல், லங்காபுர பகுதிகளிலும் விசேட பிரிவொன்றை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.