கரு தேசியத் தலைவர்! ஐ.தே.கவின் புதுத் திட்டம்

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியத் தலைவராக கரு ஜயசூரியவை நியமித்து பொதுத்தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கப் போவதாகக் கட்சியின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இந்த யோசனை கடந்த வியாழக்கிழமை கட்சியின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுத் தற்போது பங்காளிக்கட்சிகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை கட்சியின் தலைவராகத் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவும் காணப்படுவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு சஜித் பிரேமதாஸவின் ஆதரவு அணி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.