ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை-தமிழக ஆளுநர் உரை

தமிழ்நாட்டில் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில், ஆளும் திமுக அரசின் நோக்கம், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

அதன் முக்கிய அம்சங்களில் ஒனறாக ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும்  ஒன்றிய அரருக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.