பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியில் பங்கேற்றுள்ள பல்லாயிரக் கணக்கானோர் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.
நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்காலில் சேகரிக்கப்பட்ட மண், யாழ். பல்கலைக்கழக ஒன்றியத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
இந்தப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளதுடன் பேரணி பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொலிஸாரின் தடைகளையும் மீறி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.