வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றேன் அது தமிழ் மக்களுக்கு எதிரான கருத்தல்ல-எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆளுநர் அலு­வ­ல­கத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கை யில், நான் தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான கருத்­துக்­களை பாரா­ளு­மன்றில் கூற­வில்லை. வடக்கு – கிழக்கை இணைக்க இந்த அர­சாங்­கத்தால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மானால் அதை நாம் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. வடக்கு வடக்­கா­கவும், கிழக்கு கிழக்­கா­கவும் இருக்­க­வேண்டும். ஆனால் இரு சமூ­கமும் ஒன்­று­பட்டு வாழ்வோம். இரு­மா­கா­ணங்­க­ளையும் இணைக்க அரசு முயன்றால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பேசினேன். தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான எந்த கருத்­தையும் நான் பாரா­ளு­மன்றில் கூற­வில்லை.

பொது­ப­ல­சேனா அமைப்­பினர் முஸ்லிம் மக்­க­ளையும் பள்­ளிவாசல்­க­ளையும் தாக்க முற்­ப­டும்­போது அதனை அரசு தடுத்து நிறுத்­த­வேண்டும். நிறுத்­தாமல் இன­ரீ­தி­யான முரண்­பா­டு­களை தோற்­று­விக்க முனைந்தால் முஸ்லிம் இளை­ஞர்­களும் ஆயுதம் ஏந்­து­வார்கள். அந்த சூழ்­நி­லைக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என கூறி­யி­ருந்தேன். இது ஒரு பௌத்த நாடு. என­வேதான் இத்­த­கைய இன­வா­தத்­துக்கு இட­ம­ளித்தால் முஸ்லிம் இளை­ஞர்கள் ஆயுதம் தூக்­கு­வார்கள் என்று கூறி­யி­ருந்தேன். மாறாக எத­னையும் கூற­வில்லை.