முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தையல் கடை விசமிகளால் தீக்கிரை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் அமைந்துள்ள தையல் கடை ஒன்றுக்கு இன்று 14.03.2020 காலை விசமிகளால் தீவைக்கப்பட்டதில் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்

நேற்று (13.03.2020) இரவு குறித்த தையல் கடை உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட கடையினை பார்வையிடுவதற்காக இன்று (14) காலை தடையவியல் பொலிசார் மற்றும் பொலிசார் வருகை தருவதை அறிந்து குறித்த கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தடயவியல் பொலிசார் மற்றும் பொலிசார் வருகைதந்தவேளை தையல் கடை தீப் பற்றி எரிந்த வண்ணம் இருந்த நிலையில் கடையினை அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து சென்றுள்ளார்கள்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் சீருடைகள் உள்ளிட்ட தையல் இயந்திரங்கள் என ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.