முல்லைத்தீவு-நாயாறு விகாரையில் வேலைசெய்த நபர் திடீர் மரணம்.

முல்லைத்தீவு-நாயாறு குருகந்த ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த நபரொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரின் திடீர் மரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் நீண்ட காலமாக குறித்த விகாரையில் தங்கியிருந்ததாகவும், இவர் அங்குள்ள பிக்குகளுக்கு சேவை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.