மருத்துவ பரிசோதனைக்காக இம்மாத இறுதியில் சிங்கப்பூர் செல்லும் கோட்டாபய

மருத்துவப் பரிசோதனை ஒன்றுக்காக இம்மாத இறுதியில் சிங்கப்பூர் செல்லவுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

தனிப்பட்ட விஜயமாக இது இடம்பெறவுள்ளதால் அதன் அனைத்துச் செலவுகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான செலவுகள் அனைத்தையும் தனது சொந்த நிதியினூடாகக் கையாள ஜனாதிபதி தீர்மானித்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்துக்கான அரச அனுசரணை எதுவும் இடம்பெறக் கூடாதென அவர் தனது செயலருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளாரென மேலும் அறியமுடிந்தது.