நியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நாள் ஒன்றிற்கு ஏறத்தாக 2000 மரணிக்கின்றனர்.

இதுவரையில் அமெரிக்காவில் 14,800 பேர் மரணித்துள்ளனர். அங்கு நேற்று (8) மட்டும் 1973 பேரும் அதற்கு முன்தினம் 1939 பேரும் மரணித்துள்ளனர். எனினும் நியூயோர்க் நகரமே அதிக பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது அங்கு தினமும் 700 இற்கு மேற்பட்டவர்கள் மரணமடைகின்றனர்.

இந்த நிலையில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அமெரிக்க கொடியை அரைக்கம்பத்தில் தனது நகரத்தில் பறக்கவிடுமாறு ஆளுநர் உத்தரவுட்டுள்ளார்.

இதுவரையில் அமெரிக்காவில் 432,000 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 150,000 மேற்பட்டோர் நியூயோர்க்கில் பாதிக்கப்பட்டுள்ளனர்.