நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை அம்பிகா சற்குணநாதன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகிய செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை எனவும், அந்த விடயம் தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அணையாளர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது இராஜினாமா குறித்து ஊடகங்களில் ஆதாரமற்ற மற்றும் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட தவறான தகவல்கள் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக தனது இராஜினாமா பற்றி தான் தீர்மானித்ததாகவும் அதன் பிரகாரமே தான் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எனினும் நாட்டிற்கான தனது பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.