தேசிய பளுதூக்கலில் முல்லைத்தீவு மாணவி சாதனை

பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பளுத் தூக்கும்போட்டியில் முல்லைத்தீவு பாடசாலை மாணவி ஒருவர் வரலாற்று சாதனை  படைத்துள்ளார்.முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி செ.ரிசபா என்ற மாணவியே பளுத்தூக்கல் போட்டியில் முதலிடத்தினை பெற்று தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி 17 வயதுப் பிரிவில் 59 கிலோ நிறையுடைய பளுத்தூக்கல்போட்டியில் 79 கிலோவை தூக்கி தேசிய அளவில் வரலாற்று சாதனை படைத்ததுடன்,முல்லைத்தீவு மாவட்டம் தண்டுவான் அ.த.க.பாடசாலைக்கும் தண்டுவான்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பாடசாலை அதிபர் கு.பஞ்சலிங்கம், பயிற்றுவித்த ஆசிரியர் குணாளன்,வினோதன் ஆகியோரும் குறித்த மாணவியின் வெற்றிக்காக அளப்பரியபணியாற்றியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.