கொழும்பு பங்குச்சந்தை மீண்டும் மூடல்

ஏறத்தாள ஒரு மாதத்தின் பின்னர் இன்று (11) திறக்கப்பட்ட சிறீலங்கா பங்குச்சந்தை சில மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

எஸ் அன் பி எஸ்எல்20 என்ற பங்குசந்தை 10 விகிதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டதால் சிறீலங்கா பங்கு வர்த்தகம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதால் பங்குசந்தை இன்று திறக்கப்பட்டது. எனினும் சிறீலங்கா அரசு சந்தித்துவரும் பொருளாதார வீழ்ச்சி அதன் பங்கு வர்த்தகத்தையும் பாதித்து வருகின்றது.