கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 612 பேர் முப்படையினர்; சவேந்திர சில்வா

சிறீலங்காவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 612 பேர் முப்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் 600 பேர் கடற்படையினர் எனவும், 11 பேர் தரைப்படையினர் எனவும், ஒருவர் விமானப் படையைச்சேர்ந்தவர் என சிறீலங்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முப்படையினருடன் நெருக்கமாகப் பழகிய அவர்களின் உறவினர்கள் 36 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.