இராணுவ அதிகாரிக்கு கொரோனா ; சாரதியும் உதவியாளரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா தொற்றாளராக அண்மையில் அடையாளம் காணப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர்கள் மூவரும் தொம்பகொட இராணுவ முகாமில் தங்கியிருந்தபோது சுமார் 20 இராணுவ சிற்பாய்களுடன் நெருங்கி பழகியுள்ளதால் அவர்களையும் தனிமைப்படுத்தடுக்கு உட்படுத்தி இருப்பதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்கள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.