இலங்கையில் அழிந்துபோன மிருகங்களும் ஒன்றாக இதுவரை கரும்சிறுத்தை(black panther) கருத்தப்பட்டுவந்தது.ஆனால் இன்று மஸ்கெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில் மிருகவேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த வலையில் கருஞ்சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.
மஸ்கெலியா காவல்துறையினர் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 08 வயதுடைய இந்த கருஞ்சிறுத்தையை உயிருடன் மீட்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக மஸ்கெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.