புதினை தடுத்து நிறுத்தாவிட்டால், ஐ.நாவில் பேசிய ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் – ரஷ்யா போர் ஏற்கெனவே “ஏராளமானோரை சென்றடைந்துவிட்டதாக,” உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார், இப்போது அதற்கான (போரை நிறுத்துவதற்கான) பொறுப்பு உலக தலைவர்களின் கையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச்சபையில் பேசிய ஜெலன்ஸ்கி, புதினை தடுத்து நிறுத்தாவிட்டால், “அவர் இந்த போரை மேலும் விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துச் செல்வார்” என எச்சரித்துள்ளார்.

கடத்தப்பட்ட குழந்தைகள் வீடு திரும்புவதையும், போர்க்கைதிகள் விடுதலை, பணயக்கைதிகள் வீடு திரும்புவதையும் உறுதிப்படுத்துவது ஐநா பொதுச் சபையில் உள்ளவர்களிடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு “சிறப்பானதாக இருந்ததாக” ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் ஆதரவை தான் மதிப்பதாக கூறிய அவர், “ஆனால் முடிவில் அமைதியை சார்ந்தே அனைத்தும் உள்ளது,” என்றார்.

“இந்த போரை ரஷ்யா இன்னும் நீட்டித்துவரும் நிலையில் அமைதியாக இருக்காதீர்கள், அதற்கு எதிராக கண்டனம் தெரிவியுங்கள்,” எனவும் அவர் கூறினார்.