நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

‘எவரையும் கைவிடாத வகையில், நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு, பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும் கூட்டாக இணைந்து முன்செல்லவும் இலங்கை தயாராக உள்ளது’ என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் அரச தலைவர்கள் அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.

அதில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.