இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சினால் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசர காலங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு தொலைபேசிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் சைரன் ஒலிகள் கேட்டால் தமக்கு அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.