மீண்டும் இஸ்லாமியர்களை சீண்டும் ஞானசார தேரர்…

முஸ்லிம் தாதியர்கள் தமது கலாசார ஆடைகளை அணிவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்துகொண்டுள்ளார்.

இதன்மூலம் அவர் இனவாதத்தை மீண்டும் தூண்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில் ஏற்கனவே முஸ்லீம் மக்கள் தொடர்பில் இனவாத கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் சிறைக்கு சென்று மீண்டு வந்திருந்த நிலையிலும் முஸ்லீம் மக்கள் தொடர்பில் அவரது வெறுப்புப் பிரச்சாரம் தொடருகிறது.

இந் நிலையில் என்.பி.பி அரசு இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.