தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறைப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதனம் எவராலும் பராமரிப்பற்ற நிலையில் இருப்பதனால் நுளம்பு பெருகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளமையால் இந்த ஆதனத்தின் உரிமையாளர் அல்லது பராமரிப்பாளர், எவரும் இருப்பின் உடனடியாக துப்பரவு செய்து நுளம்பு பெருகும் இடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி 22ஆம் திகதிக்குள் 0212263973 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்தவும்.
இல்லையெனில் இவ்வறிவித்தலை அலட்சியம் செய்யும் பட்சத்தில் இந்த ஆதனம் எம்மால் பொறுப்பேற்கபடும்’ என தெரிவித்து வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளரால் சிவப்பு எச்சரிக்கை காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.