கோட்டாபய பதவி விலகுவதாக அறிவிப்பு- தீர்வை பெற விரைவாக செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்து

ஜனாதிபதி தனது இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, நீண்ட கால தீர்வைப் பெறுவதற்கு விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு புதிய அரசாங்கமும் “நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய மற்றும் இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்கு விரைவாக செயல்பட வேண்டும்” என அமெரிக்கா மேலும் கூறியுள்ளது.