பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக மாணவர்களால் செவ்வாய்கிழமை (23) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேஸ்லைன் வீதியை மறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் வீதி மறிக்கப்பட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெறிசலால் பயணிகள் பெரும் சௌகரியத்தை எதிர்கொண்டனர். பட்டங்களுக்கான தெளிவான தகுதிகளையும், பட்டதாரிகளுக்கான எளிமையான ஆட்சேர்ப்பு செயல்முறையையும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் பேச்சுவார்த்தைகளைகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவித்து இவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.